சென்னை: வேளச்சேரியில் பட்டப்பகலில் 4 வயது குழந்தை காரில் கடத்தப்பட்ட துணிகரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைக்கிளில் சென்ற சாந்தி என்பவரை வழிமறித்து அவரது பேத்தியை மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்றனர்.
சென்னை வேளச்சேரி, ஏ.ஜி.எஸ் காலனியைச் சேர்ந்தவர் சாந்தி. இவருடைய 4 வயது பேத்தி அட்சயா. இன்று (ஜூன் 12) சாந்தி தனது பேத்தி அட்சயாவை சைக்கிளில் அமரவைத்துக் கொண்டு வெளியில் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, அவர்கள் சென்ற வழியில் திடீரென ஒரு கார் வந்து சாந்தியின் சைக்கிளை மறித்து நின்றது. காரில் இருந்து இறங்கிய நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், கண் இமைக்கும் நேரத்திற்குள் சைக்கிளில் இருந்த குழந்தை அட்சயாவைப் பறித்துக் கொண்டு காரில் ஏறி தப்பியோடியது. சாந்தி சத்தம் போட்டு அலறியும், மக்கள் நடமாட்டம் உள்ள அந்தப் பகுதியில் பட்டப்பகலிலேயே இந்தக் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
குழந்தை கடத்தப்பட்டது குறித்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
குழந்தை கடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இது குடும்பப் பகையினால் நடந்த கடத்தலா? அல்லது பணம் பறிப்பதற்காக மர்ம கும்பல் இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்டதா? என்ற கோணங்களில் ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படைகள் அமைத்து கடத்தல்காரர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, போலீசார் நடத்திய விசாரணையில், குடும்பத் தகராறில் தனது மருமகளான குழந்தையின் தாயே குழந்தையை கடத்தியதாக சாந்தி கூறியுள்ளார். கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை தொடர்புகொண்ட போலீசார், அவரை குழந்தையுடன் நேரில் ஆஜராகுமாறு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையின் முக்கியப் பகுதியான வேளச்சேரியில், அதுவும் பட்டப்பகலில் பாட்டியிடம் இருந்து குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
-
வாழ்த்துக்கள் ஒட்டக்கூத்தர் ஜீவசமாதி தாராசுரம்
-
அருமை
-
Congratulations pappa
-
வாழ்த்துக்கள்
-
வாழ்த்துக்கள்
